சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக,…

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக, கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. 

அதன்படி

  • தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்,
  • செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே நாலை காலை 11.00 மணி முதல் மதியம் 2.20 மணி வரை இயக்கப்படும் ரயில்கள்,
  • செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே நாளை காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
  • காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
  • திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, நாளை காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20 மற்றும் 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15 மற்றும் 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள்,
  • சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணிவரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 1 மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.