தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக் குறித்த வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக இன்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகத் தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளைப் பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்”
இதையும் படியுங்கள்: சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!
இவ்வாறு தேமுதிக சார்பில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.