28.1 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.  அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விஜயகாந்தின் உடல் நிலை,  ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது எனவும்,  தொடர்ந்து ஒரு நேரம் போல் மற்றொரு நேரம் அவருடைய உடல் நிலை சீராக இருப்பதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  சளி அதிகமாக உள்ளதால் சுவாசத்தில் அவ்வப்போது சிரமம் ஏற்படுவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகியபடி இருந்தன.  இதனையடுத்து விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனவும் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: “மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஒரு நீதிபதியின் தலைமையில் தணிக்கை செய்ய வேண்டும்!” – அண்ணாமலை

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading