கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் தாக்குதல் கல்லூரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே வெளியில் இருந்து வந்த 50 பேர் கொண்ட கும்பல் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அரசு கலைக் கல்லூரியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக முதுகலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிகவியல் மாணவர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி :பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜா
இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் அவர்கள் பெற்றோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் தனது அறையில் வைத்து கண்டித்துள்ளார். அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த 50 பேர் கொண்ட ரவுடி கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
வெளியில் இருந்து வந்த கும்பலை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் கல்லூரி மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். இந்நிலையில் கல்லூரிக்குள் நடந்து வரும் பிரச்சனையை கல்லூரி ஆசிரியர்கள் கண்டித்து கொண்டிருக்கும் வேளையில் வெளியில் இருந்து வந்த ரவுடி கும்பல் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-கா.ரூபி.







