தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். தமிகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பால் வழங்கப்படவில்லை என நலச் சங்கத்தினார் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், ஈரோடு, நசியனூர், ராயபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியல் போராட்டத்திலும், பாலை சாலையில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். அதில், தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது. தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினரின் தூண்டுதலின் பெயரில் இதுபோன்று சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.