“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்

சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள்,…

சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில், அதிமுக ஆட்சியில் அதிக அளவில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டதாகவும், கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உயர் கல்வித்துறையில் தமிழகம் சாதனை படைத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நூற்றுக்கு 49 பேர் உயர் கல்வி படித்து வருவதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.