ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது .
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெவ்வேறு பகுதிகளில் இருந்து பழங்காலத்தைச் சேர்ந்த மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகும். இந்த சிலைகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சிலைகள் அனைத்தும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டது . இதற்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளியிடம் மூன்று சிலைகளையும், அதற்கான ஆவணங்களையும் ஒப்படைத்தார்.