இரண்டாவது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி 20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.