இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி 20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.







