பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதியமைச்சர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சை மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச்சலுகையை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர தற்போது வாய்ப்பில்லை எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.