இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்க ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 2 தினங்களாக அமைச்சர் உதயநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும் : ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
இந்நிலையில் இன்று ஈரோடு பெரியார் நகர் பகுதியில் மாவட்ட அனைத்து இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ,நாசர், செஞ்சிமஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மனித ஒழுக்கத்தை பற்றி குரான் சொல்லுவதால் எனக்கு குரான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இந்த தேர்தலுக்காக உழைத்திருக்கிறார்கள். இந்த பகுதியில் என்ன பிரச்சனைகள் உள்ளது என்பது அமைச்சர்களுக்கு அத்துபடியாகியுள்ளது.
எந்தவிதமான மத, பேதமில்லாமல் ஒற்றுமை உணர்வோடு செயல்படுபவர்கள் திமுகவினர். நல்ல காரியங்களை உணர்வு பூர்வமாக செய்பவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். தற்போது முதலமைச்சர் எங்கிருந்தாலும் அவரது கவனம் முழுவதும் ஈரோட்டிலே உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான்” என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.