முக்கியச் செய்திகள்

மணமேடையில் குடிபோதையில் தள்ளாடிய மணமகன்.. மணமகள் செய்த செயலால் அதிர்ச்சி!

அசாமில் மணமேடையில் குடிபோதையில் தள்ளாடி மணமகனை கண்டு ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றும், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் பெரியோரிகள் கூறுவார்கள். அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனின் செயலால் திருமணமே நின்றுள்ளது. அப்படி என்னதான் அந்த திருமணத்தில் நடந்தது. வாருங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: ஜிம்மி கிம்மல் கேட்ட கேள்வி; சாதுரியமாக பதிலளித்த மலாலா!

அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் கதாநாயகன் பெயர் பிரசென்ஜித் ஹலோய். இந்து முறைப்படி நடந்த இத்திருமணத்தில் பல சடங்குகள் நடைபெற்றது. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன் பிரசென்ஜித் ஹலோய் மூக்கு முட்ட குடித்து விட்டு தள்ளாடிய படி குடிபோதையில் மணமேடையில் உட்கார்ந்திருந்ர். இதனால் அவரால் மணமேடையில் உட்கார்ந்து சடங்குகள் செய்யமுடியாமல் திணறினார்.இதனை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மணமகன் மதுபோதையில் திருமண நிகழ்வில் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடந்த பத்தாண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தின் விவரங்கள்

G SaravanaKumar

அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

Web Editor

தமிழகம்: கொரோனா பாதிப்பு நிலவரம்!

Halley Karthik
WPL 2023: மகுடம் சூடிய மும்பை இந்தியன்ஸ் RBI அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள் BAFTA விருதுகள் 2023 ”நிகரென கொள் 2023” – பாலின சமத்துவ முன்னெடுப்பு விண்ணில் சீறிப்பாய்ந்த எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் வந்தான் சோழன்! வெளியானது பொன்னியின் செல்வன்!! சண்டிகர்: 51வது ரோஜா கண்காட்சி சித்-கியாரா Reception புகைப்படங்கள் சுவாமி விவேகானந்தரின் உலக பயணங்கள் ( 1893 – 1900) சென்ற இடமெல்லாம் வென்ற மாமன்னன் ராஜராஜன்