எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!

எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…

எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில்
மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை  செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த
வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன்.  இவர் கடந்த 2018-ல் இந்திய இராணுவத்தில்
சேர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்,  கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவத்திலிருந்து ஒரு மாத விடுப்பில் தனது சொந்த ஊரான
வெம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

நேற்றிரவு ராணுவ வீரர் வேல் முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது,  மர்மமான முறையில் கத்தியால் குத்திக்
கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர்,  அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராணுவ வீரரை கண்ட
அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.  இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து
சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சடலமாக கிடந்த ராணுவ வீரர்
வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் கொலை
நடந்த இடத்தை பார்வையிட்டு விளாத்திகுளம் (பொறுப்பு) டி.எஸ்.பி லோகேஷ்வரன்
தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் பேரில், தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.