35.8 C
Chennai
June 28, 2024
இந்தியா செய்திகள் விளையாட்டு

மீண்டும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக  ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 20 அணிகள் விளையாட உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading