Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு.…

வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு. பிரபல சமூக ஊடகங்களான முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப்பில் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் சேனல் வசதியில், எழுத்து வடிவ தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி உள்ளது.

இதில் பிரதமர் மோடி பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து வாட்ஸ்அப் சேனலில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் மக்களுடன் நெருங்கி பழகவும் தொடர்புகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடி வாட்ஸ் அப் சேனலில் இணைந்த ஒரே நாளில் (24 மணி நேரம்) அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அவரது வாட்ஸ அப் சேனலில் 50 லட்சத்திற்கும் மேலானவர்கள் இணைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலம் வாட்ஸ்அப் சேனலில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட உலக தலைவர் ஆனார் பிரதமர் மோடி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் 50 லட்சத்துக்கும் அதிகமான சமூகமாக மாறிவிட்டதால், எனது வாட்ஸ்அப் சேனல் மூலம் என்னுடன் இணைந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி. இந்த அற்புதமான ஊடகத்தின் மூலம் நாங்கள் உரையாடலைத் தொடர்வோம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் இணைந்திருப்போம்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.