அரசு விரைவு பேருந்துகளில் 50% கட்டண சலுகை- அமைச்சர் சிவசங்கர்

அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின்…

அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 21ம் தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒவ்வொரு துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று போக்குவரத்து மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார்.
அப்போது போக்குவரத்து துறையில் புதிய சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். முக்கியமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாகை, அடுத்த தொடர் பயணங்களுக்கு, அதாவது ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் என்ற புதிய அறிவிப்பினை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.