29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளது: பழனிசாமி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மேட்டூர் அணை உபரி நீரை சேலத்திலுள்ள 100 ஏரிகளில் விடுவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக பதவியேற்றுள்ளது திமுக அரசு என்றார். இதுவரை இல்லாத நடைமுறையாக கேரளா அமைச்சர்களின் மேற்பார்வையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பது, தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்க்கும் செயல் என குற்றம் சாட்டினார்.

 

மேலும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நீர் ஏற்று பாசனம் மூலம் தண்ணீரை திறந்து விடவேண்டும் என கூறினார். இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பூத் வாரியாக வாக்குகளை சேகரிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading