டெல்லி செல்வது ஏன்..? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்.!

கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவின் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் அதிமுக தலைமையகத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி  இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ;

பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஸ்டாலினின் வாடிக்கையாக இருக்கிறது. கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்கிறோம். நாங்கள் டெல்லி செல்வதை விமர்சிக்கிறார்கள். அப்படி என்றால் கனிமொழி எதற்கு டெல்லி சென்றார்?

அதிமுக அலுவலகத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை.

எங்கள் கூட்டணியில் காலையில் வந்தார்கள். மலையில் தொகுதி பங்கீடை அறிவித்துவிட்டோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.