முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள்…

முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று (ஜூன் 23) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்,

“NEET-PG ஐ NBE ரத்து செய்தது, UGC-NET ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நமது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை ஆழ்ந்த விரக்தியில் தள்ளியுள்ளது. மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக திட்டமிட்டு  இணைவோம். தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கு, தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, மிக முக்கியமாக, எங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை மீண்டும் நிறுவுவதற்காக இணைவோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.