பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி

பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில்…

பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளைப் பிடுங்கி, அதிலிருந்த பொருட்களை கீழே கொட்டினார். தொடர்ந்து, காலணியை வைத்து பெண்ணை அடித்து விரட்டினார்.

இதையும் படியுங்கள் : “கோடநாடு வழக்கு அதிமுக ஆட்சியில் முடியும்” – இபிஎஸ்

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அந்த பெண்கள் கண்ணீர் மல்க பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நியூஸ் 7 தமிழ், முக்கிய செய்தியாக வெளியிட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்தார்.

இதுகுறித்த வீடியோவைக் காண : 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.