புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம் ஆபாசமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்து தருவதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் மதனின் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், சிறைத்துறை அதிகாரி குறிப்பிட்ட தொகையை சில நாட்களில் தாம் ஏற்பாடு செய்துவிடுவதாக கிருத்திகா கூறியுள்ளார். இதுதொடர்பாக முகில் செல்வம் என்ற பெயரில் கூகுள் பே செயலி மூலமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பணம் கேட்டது உண்மை என தெரிய வந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.