33.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கடும் வெப்பம்; பணி நேரத்தை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கடும் வெயில் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில்,பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடும் வெயிலால் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், நடை வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் வெயில் அதிகரிப்பதால் பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹூஜா எழுதியுள்ள கடிதத்தில், பணியிடங்களில் போதிய குடிநீர், காற்றோட்டம் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பணி நேரத்தை மாற்றியமைப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லாத ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் வழங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram