இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,31,74,954 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,42,009 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், இதுவரை 72,37,84,586 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,58,491 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.







