24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்

தமிழ்நாட்டிற்கு தோசை, இட்லி சுட வரவில்லை. பாஜகவின் மாநிலத் தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சரை நன்றாக தூங்க விடுங்கள். நன்றாக தூங்கினால் தெளிவாக பேச முடியும். ஒய்வு இல்லாமல் உள்ளார். தமிழக அரசியலில் ஜாதிகளை கலந்த ஒரே கட்சி திமுக தான். பிரிவினையை கொண்டு வந்த பெருமையும் திமுகவிற்கு தான் உண்டு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும்: லஞ்சம் வாங்கிய அதிகாரி; கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்!

இந்தியாவில் வடக்கு, தெற்கு, தமிழகத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, கொங்கு என கொண்டு வந்தது திமுக தலைவர். தவறு செய்ய கூடாது என்று தான் கேள்வி கேட்கிறோம். சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரை கொன்றது பிரதமர் என பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் சொன்னார். தமிழ்நாடு அமைதியாக இருக்கா என்றால் என் மீது எப்.ஐ.ஆர். போடுகின்றனர். கமல்ஹாசன் நடித்த படத்தில் எதை பார்த்தாலும் பயம் என்பது போல் முதலமைச்சருக்கு இருந்தால் நான் என்ன செய்ய முடியும்.

தேஜ்ஸ்வி யாதவ் முதலமைச்சரின் பேரன் வயது. அவர் தந்தையின் தயவுடன் பீகாரின் துணை முதல்வராக உள்ளார். பேரன் வயதில் உள்ள துணை முதல்வரின் சான்று வாங்குவது முதலமைச்சர் பெருமைபடுவது, அவரது அரசியல் தாழ்ந்து போய் உள்ளது என்பதை காட்டுகிறது.

தேசிய அரசியல் என்றால் கே.சி.ஆர்., மம்தா, நிதிஷ்குமார், அரவிந்த் ஜெக்ரிவால் வந்து இருக்க வேண்டும். சினிமாவில் ஹீரோ பின்னால் 2ம் தர ஹீரோக்கள் பேசுவது போல் இருந்தது. இதை பார்த்து பா.ஜ.க. பயப்பட போகிறதா?. மோடி ஆட்சியில் யாரை பார்த்தும் எங்கு பயம் இல்லை. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் காலத்தில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து இருந்தார்கள். குழந்தைகளை அழைத்து வந்து பேசுவது தமிழக மக்களை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.

முல்லை- பெரியாறு அணை விவகாரத்தில் 2 முதலமைச்சர்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். 2024ம் ஆண்டு தேர்தலுக்காக தமிழக முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும் இணைந்து சதி திட்டம் திட்டுவது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. தமிழகத்தை பற்றியோ, கேரளாவை பற்றியோ கவலை கிடையாது. இந்திய அரசியலில் எம்.பிக்கள் கிடைத்தால் டெல்லி சென்று பேரம் பேசலாம் என்பதற்காக இணைந்து உள்ளனர். அதுப்போல் தான் வைகோவும்.

கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள். திராவிட கட்சிகளை சார்ந்து தான் பா.ஜ.க. வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள்.பா.ஜ.க.வில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா? அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுபோல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான்.

பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுப்பேன். வரும் காலத்தில் வேகத்தில் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை. திட்டி விட்டு விவசாயம் செய்யாமல் வேறு கட்சிக்கு போய் வாழ்க என கோஷம் தானே போடுகிறார்கள்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy