குழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது

பெண் குழந்தைகளிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் அதே பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து…

பெண் குழந்தைகளிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் அதே பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். மது பழக்கம் காரணமாக சரவணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணனின் மனைவி தன் பிள்ளைகளை கணவரிடம் விட்டு விட்டு கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருந்துள்ளதை கண்டு, இதுகுறித்து குழந்தைகளிடம் கேட்டபோது அவர்கள் தந்தை சரவணன் இரவில் தங்களிடம் தவறாக நடக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதில் அதி்ர்ச்சியடைந்த சரவணனின் மனைவி இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்துள்ளனர். தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.