நாகர்கோவில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி, அவர்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அழித்த வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காசியின் தந்தை தங்கபாண்டி ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தங்கபாண்டியனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் சாட்சியங்கள் மிரட்ட கூடாது, சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்பட கூடாது எனவும் விசாரனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல் துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.