ஈரோடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இடைத்தேர்தலுக்காக 238 வாக்கு சாவடி மையங்களும் கூடுதலாக 48 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ஆயிரத்து 430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், தலா 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லபட்டன.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும்,
கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது..
“ பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம் இதற்காக இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் இன்று திறக்கப்பட்டு தேர்தல் பொது
பார்வையாளர் முன்னிலையில் மண்டல வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்து வருகிறது.
இந்த வாக்குபதிவு எந்திரங்கள், பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக் கொள்வார்கள். 32 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : திருப்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம். இதற்காக இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை 796 தேர்தல் விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் பல புகாருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களிப்பதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை.
ஒருவர் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து தான் வாக்களிக்க முடியும். எனவே இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு
இல்லை. தேர்தல் நடைபெறும் 238 வாக்கு சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள்
பணியில் ஈடுபடுவார்கள் என என மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.
– யாழன்







