முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: விரல்களில் வைக்கப்படும் மை தரமாக இல்லை – அதிமுக புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.இன்பதுரை வாட்ஸ்ஆப் மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.

அதில், வாக்களித்ததன் அடையாளமாக விரல்களில் வைக்கப்படும் மையின் தரம் மோசமாக உள்ளது என்றும், இதனை உடனடியாக சரி செய்யாவிட்டால், அது கள்ளஓட்டு போடுவதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, மையின் தரம் குறித்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jeba Arul Robinson

ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது-இபிஎஸ் ஆவேச பேட்டி

Web Editor

தேடல் சுவாரசியமானது – ரெய்டு பற்றி ப.சிதம்பரம்

Halley Karthik