கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு சரியான காரணத்தை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், கடந்த ஒருசில வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை என்றும் மாறாக வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கொரோனா நோய்த்தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்றளிக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் இறந்தவர்களை வேறு காரணங்களால் உயிரிழந்தவர்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, உறவினர்கள் கலந்துகொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கள்வதாகவும், இதனால் நோய்த்தொறே்று அதிக அளவில் பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா நோயினால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதோடு, கொரோனா வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.