கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் 7 மாநிலங்களில் மட்டுமே, கொரோனாவால் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாவதாகவும் 6 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்றால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் திறனை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது