33 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

நத்தமாடிப்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி- 481 காளைகள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவை
முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 பேர் காயம் அடைந்தனர், 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டியில் கருப்பண்ணசாமி கோவில் தருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் துவங்கி மதியம் 2:30 மணிக்கு நிறைவடைந்தது. இப்போட்டியில் 481 காளைகளும் , 12 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

அண்மைச் செய்தி: அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

ஐந்து சுற்றாக நடைபெற்ற இப்போட்டியில்   சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், குக்கர் ,டிவி ஸ்டாண்ட்  மற்றும் ரொக்கப் பணம்
உள்ளிட்டப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 24 நபர்கள் காயமடைந்தனர். இவர்களில் பார்வையாளர்கள் 9 பேர் , மாடுபிடி வீரர்கள் 4பேர், மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர், மற்றும் பாதுகாப்புக் குழுவில் 1 நபரும் காயமடைந்தனர்.


போட்டியைக் காண வந்த கொசவப்பட்டியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவருக்கு வலது புறம் வயிற்றில் காளை குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாவட்ட கண்காணிப்பாளரான வி. பாஸ்கரன் அவர்கள் தலைமையில் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading