32.9 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. அதன் படி இன்று 100 டோஸ் தடுப்பூசி மட்டுமே இருந்தது. ஆனால் தடுப்பூசி போட 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தடுப்பூசி போட்டுகொள்ள சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அதனை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மருத்துவமனை ஊழியர்கள் முறையாக டோக்கன் வழங்காமலும், தடுப்பூசி இருப்பு குறித்து தெரிவிக்காமல் தங்களை நீண்ட நேரமாக காத்திருக்க செய்ததாகவும் கூறிய பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு தடுப்பூசி போடுவதாகவும் பொதுமக்களை அலைகழிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வரிசையில் நின்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கபட்டு நாளை தடுப்பூசி போடபடும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading