பழைய பேருந்துகளை கடலில் இறக்கிய இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் சிஐடியு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை கடலில் இறக்கினார்.மேலும், பழைய பேருந்துகளை போன்று, பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் என அவர் தெரிவித்தற்கு, தமிழக மீனவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,
ராமேஸ்வரத்தில் இன்று காலை ஏஐடியூசி அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியுடன் அந்தோணியார் கோவில் பகுதியில் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இத்தகைய சம்பவத்திற்கு மத்திய மாநில அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.







