முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

சென்னைக்கு வந்த 13-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 13-வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை மேற்கு வங்கம் தாராபூர், ஜார்கண்ட், ஜம்ஷெட்பூர், மகாராஷ்டிரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளில் ஆக்ஸிஜன் ஏற்றி வந்துள்ள நிலையில் இன்று ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 2 கன்டெய்னரில் 43 டன் ஆக்சிஜன் முழுவதும் நிரப்பப்பட்டு 13 வது சிறப்பு ரயில் தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி-க்கு வந்தடைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இங்கிருந்து சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனை ,ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 746 டன் ஆக்சிஜன் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு தயாரித்த ஆளுநர் உரை சட்டப்பேரவை இணையதளத்தில் பதிவேற்றம்!

Jayasheeba

காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை நீக்க டிஜிபி உத்தரவு

EZHILARASAN D

விமானத்தில் ஏறி பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் காங்கிரசார்

Web Editor