28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!

தமிழகத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த கிருஷ்ணசாமி, சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம், ஏப்ரல் 20ஆம் தேதி, தாம் புகார் அளித்ததாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தமது மனுவில் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க, உயர்நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது, எனத் தெரிவித்த நீதிபதிகள், கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram