அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில் கடந்த 7ம் தேதி தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதையும் படியுங்கள் : பாலஸ்தீன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு! ”போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும்!”

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை 15 க்கு மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருமானூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 10 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் எரிந்து சேதமடைந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.