முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து ஆர்ட்ஃபோரம் பத்திரிகை சார்பில் கடிதம் ஒன்றை எழுதியதால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட குறைந்தது 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 20வது நாளாக நடைபெற்று வரும்  போரில் இருதரப்பில் இருந்தும் சுமார் 8000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டு 210 பேரைக் கைப்பற்றிய பின்னர்,  சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்க , இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தன. அதேபோல ரஷ்யா, வடகொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளிட்டவை பாலஸ்தீனத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் ஆர்ட்ஃபோரம் பத்திரிக்கை இந்த போரில் பாலஸ்தீனத்தை ஆதரித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது. அந்த கட்டுரையில் இஸ்ரேலின் ராணுவத்தால் பாலஸ்தீனத்தில் தாக்குதலில் உள்ளான 418 கிராமங்களை கூடாரம்போல் அமைத்து விரிவான கட்டுரையை எழுதி பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை ஆதரவளித்திருந்தது.

ஆர்ட்ஃபோரம் பத்திரிக்கையின் தற்போதைய நிர்வாக ஆசிரியராக டேவிட் வெல்சாகோ செயல்படுகிறார். பாலஸ்தீனம் தொடர்பாக ஆர்ட்ஃபோரம் பத்திரிகையின் கட்டுரைக்கு அமெரிக்காவில் உள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவின் பல அரசியல்வாதிகளும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதனால் ஆர்ட்ஃபார்ம் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான டேவிட் வெல்சாகோவை அந்த பத்திரிக்கை நீக்கியுள்ளது.

இது தொடர்பாக டேவிட் வெல்சாகோ கூறும்போது “ பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கட்டுரையால் பத்திரைக்கு பலரது மத்தியில் இருந்து நெருக்கடிகள் வரத் தொடங்கின. இதனால் அவர்கள் என்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

“தேர்தல் முடிவுற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. வில்சன்!

Web Editor

பாட்னாவில் கூடியுள்ள எதிர்கட்சிகள் – தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை

Web Editor

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading