ஒன்றை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை குழந்தைக்கு சிறு பாதிப்பும் நேராமல் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி – வனிதா தம்பதியருக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித் வீட்டில் உள்ள சமையலறையில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு உள்ள பாத்திரத்தை எடுத்து தலையில் கவிழ்துள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக ஈயப் பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அஜித் நீண்ட நேரம் கூச்சலிடவும் பெற்றோர்கள் குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை மீட்க பல மணி நேரம் போராடினர். அதன்பின் பாத்திரத்தை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரமாக போராடி குழந்தையின் தலையில் இருந்த பாத்திரத்தை வெட்டி குழந்தையை காயமின்றி பத்திரமாக அகற்றினர். துரிதமாக செயல்பட்டு குழந்தையின் தலையில் சிக்கி இருந்த பாத்திரத்தை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினரை அப்பகுதி பொதுமக்களும், குழந்தையின் பெற்றோரும் வெகுவாக பாராட்டினர்.
– அ.மாரித்தங்கம்







