தமிழ்நாட்டில் புதிதாக 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 700 -க்கு கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது தினசரி பாதிப்பு 600-ஐ தொட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 606 பேருக்கு தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட சோதனையில் 603 பேருக்கும் ஆப்ரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதியானதை அடுத்து, இந்த எண்ணிக்கை 606 ஆக இருக்கிறது.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,43,427ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,99,994 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 6708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 165 பேருக்கும் கோயம்புத்தூரில் 87 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.