நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கும் போது
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள்
அத்துமீறி நுழைந்து இடிந்தகரை மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும்,
படகுகளை சேதப்படுத்தி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில்
நேற்று சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரையை சேர்ந்த
நாட்டுப் படகு மீது மோதியதில் படகு சேதம் அடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கூடங்குளம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூட்டப்புளி, கூடுதாழை, உவரி உட்பட 10 கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இடிந்தகரையில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி அதில் நாட்டு படகு மீனவர்களை தாக்கிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும்.
பாதிப்படைந்த மீனவர்களுக்கும் சேதமடைந்த படகுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஒரு நாள் அடையாளமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
-அனகா காளமேகன்