பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!

விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவர் டாடா ஏசி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.…

விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவர் டாடா ஏசி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியில் ஊரணித் தெரு, தனியார் தோப்பில் வைத்து சிலர் இன்று (செப். 30) முத்துக்குமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது, இளைஞரின் உறவினர்கள் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞரின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முத்துக்குமாரை யாராவது அழைத்து வந்து கொலை செய்தார்களா? அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.