புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக போலீசாரால் 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், அச்சுறுத்தல் தரும் வகையில் வாகனம் ஓட்டுதல், மூன்று பேர் அமர்ந்து வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்பட்டதாக 572 வழக்குகள் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.