மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்
சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலை 10 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகளை திறந்திருப்பதால், வியாபாரம் குறைவாக நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேநேரத்தில், விதிகள் மீறப்படுமானால், அதிக அளவு தொகையை அதிகாரிகள் அபராதமாக விதிப்பதாகவும் விக்கிரமராஜா குற்றம் சாட்டினார். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.