வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படுமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர், 1924 மார்ச்…

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படுமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர், 1924 மார்ச் 30ல் சமூக சீர்த்திருத்தத்தின் அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள் இது. இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் வைக்கம் போராட்டம் முக்கிய இடம் பெற்றது. பெரியார் நடத்திய முக்கிய போராட்டங்களில் ஒன்று வைக்கம் போராட்டம்.

வைக்கம் போராட்டம் 1924 ம் ஆண்டு முதல் 1925ம் ஆண்டு வரை ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்றது. 1925-ல் இது முடிவுக்கு வந்தது. வைக்கம் வீரர் என்று தமிழ்த்தென்றல் திருவிக பாராட்டினார். பெரியாரை போற்றும் விதமாக 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. இந்த விழா ஓராண்டு வரை நடைபெறும். போராட்டத்தின் நோக்கத்தையும், வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் அறியும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும். பெரியார் முதன்முதலாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் ஏப்ரல் 1 அன்று கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சரோடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறேன். வரும் நவம்பர் 29 ஆண்டும் தமிழ்நாடு – கேரள முதலமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாட்டில் நடத்தப்படும். சமூக நீதி நாளான செப்டம்பர் 17 அன்று வைக்கம் விருது வழங்கப்படும்.

https://twitter.com/mkstalin/status/1641315760973959168

பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள், நிறுவனங்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட மாடல் ஆட்சி நடந்துக் கொண்டிருக்கும் போது வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வருவது பெருமைக்குரியது. இவை அனைத்தும் ஓராண்டுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.