மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கார் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் இருந்து இன்று அதிகாலை கனகவேல் (61) தனது குடும்பத்துடன் காரில் தளவாய்புரம் சென்று அங்கிருந்து வில்லாபுரம் நோக்கி வந்துள்ளார். அப்போது, சிவரக்கோட்டை அருகில் பாண்டி என்ற பழ வியாபாரி தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் காரின் குறுக்கில் வந்ததால், சாலை விபத்து ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில், கார் தூக்கி வீசப்பட்டு காரில் பயணித்த கனகவேல், கிருஷ்ணகுமாரி, நாகஜோதி மற்றும் சிவ ஆத்மிகா என்ற 8 வயது குழந்தை உட்பட காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து விபத்து சம்பந்தமாக அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடல்களை மீட்டு மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மீண்டும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை விபத்து குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.