திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கார் விபத்தில் இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார், தடுப்புச்சுவர் மீது கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் கெட்டலஹள்ளி பகுதியில் இயங்கி வரும் டி.பி.எம். சீயோன் பெந்தகோஸ்தே மிஷன் சபையின் மூத்த பாதிரியார்கள் விக்டர் மோகன் மற்றும் தாவீது ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பாதிரியார்கள் உடல்களை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சாம்சன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு பாதிரியார்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி திருச்சபை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.