அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களே என்றும், இணைப்புக்கு பேச்சே இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டிற்காக பாடுப்பட்டவர்களுக்கு மணி மண்டபம் கட்டி கொடுத்தோம் என்றார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுகவினரின் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கிராமத்தில் படித்தவர்கள் மருத்துவம் படிப்பதற்கு அதிமுக தான் காரணம். 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி செலவை அரசே ஏற்கும் என அதிமுக அரசுதான் கொண்டு வந்தது. ஆனால், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் கல்வி, சட்டக் கல்விக்கு பயன்படுத்தியுள்ளது திமுக. எதிர்கட்சிக்கும் நல்ல யோசனை கொடுத்ததுதான் அதிமுகவிற்கு கிடைக்க பெருமை என கூறினார்.
ஏழை எளிய மக்களுக்கு கொண்டு வந்த அனைத்து திட்டங்களை திமுக அரசு தடுத்து விட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். நிதி அமைச்சர் முடியாது என்றார். ஆசிரியர்களையும் கைவிட்டு விட்டனர். தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கின்றது. இந்தி மொழிக்கு எதிர்ப்பு என்பது காங்கிரஸ் ஆட்சியில் தான் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு திமுக ஏமாற்றுகிறது.
2024 ல் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் ஒன்றாக வர வாய்ப்பிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் சொல்கிறார்கள். அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து இரு தேர்தலில் வெற்றி பெறுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்ற அவர் இணைப்புக்கு பேச்சே இல்லை என்றும் கட்சி பிரிந்தது என ஊடகத்தினர் பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.