”100 நாள் வேலைத் திட்டத்தை முற்றாக அழிக்க நினைக்கும் பாஜக” – திருமாவளவன் பேட்டி…!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு முற்றாக அழித்து ஒழிக்க நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதற்காகவே இந்த பெயர் மாற்றம். இந்த திட்டத்தின் மேல் அவர்களுக்கு மீது காழ்ப்புணர்ச்சி உள்ளது. பாஜக அரசு பொறுப்பெற்றதிலிருந்தே காந்தியடிகளை சிறுமை படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த போக்கை கண்டிக்கிறோம். அத்துடன் திமுக தலைமையில் அனைத்து மதச்சார்ப்பாற்ற கட்சிகளும் ஒன்றிய அளவில் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தேர்தலுக்கு விசிகவில் மாவட்ட செயலாளர்கள் நியமனப் பணிகளை துவங்கும். எஸ்.ஐ .ஆர் மூலம் பலரை நீக்குவதே பாஜகவின் நோக்கம். தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்குரிமை என்ற பெயரில் மக்களின் குடியுரிமையை பறிக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவாகாரத்தில் ஒரு நபர் உயிரிழந்துள்ளது வருந்தத்தக்கது. அவரின் குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது  வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். பாஜகவின் மதவெறி அரசியலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது வருந்தத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.