முக்கியச் செய்திகள்இந்தியாதமிழகம்

“மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் பேசியதாவது,

“நாட்டின் அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். தனிப் பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை. இந்தியா கூட்டணி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் சூழல்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுப்போம் என்று அனைத்து தலைவர்களும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. அதைப் பற்றி பெரிதாக யாரும் கூட்டத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று இருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்புள்ளது. பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக் நாத் ஷிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் – ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!

Jeni

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு சென்ற மாணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

EZHILARASAN D

இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading