தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும் ஆழமானது மட்டுமின்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகானதும் கூட. உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் பெரும்பான்மையான பெண்களுக்கு பிடித்தமான உறவு என்றால் அது அவர்களின் தந்தையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு தந்தைக்கும் அவருடைய மகளுக்கும் உள்ள உறவு ஏன் சிறப்பு வாய்ந்தது என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெண்ணின் வாழ்க்கையில் தந்தை முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார். பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன.
அந்த வகையில், இங்கு தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவியின் தந்தை மகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகளுக்கும், அவளுடைய அப்பாவுக்கும் இடையிலான இந்த இதயம் கனிந்த சந்திப்பு பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற அந்த மாணவி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை ஜூன் 2 ஆம் தேதி பகிர்ந்துள்ளார். அதில், ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை 10.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்களில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வந்து என் அப்பா என்னை ஆச்சரியப்படுத்திய போது என் இதயம் துடித்தது. என் கண்ணை என்னாலையே நம்பமுடியாத தருணம் அது. என் அப்பா கதவு வழியாகச் சென்றபோது நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்து உணர்ச்சியால் மூழ்கினேன். அவர் என்னைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்தார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அத்தகைய நம்பமுடியாத அப்பாவைப் பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் அப்பா” என்று இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டதிலிருந்து, வீடியோ வைரலாகி வருகிறது. இப்போது வரை கூடுதலாக, இந்த பகிர்வு மக்களிடமிருந்து பல அன்பு நிறைந்த கருத்துகளை ஈர்த்துள்ளது. அதில் “என் மகள் இத்தாலியில் பிஎச்டி படித்து வருகிறாள். நான் அவளை ஒரு பெரிய ஆச்சரியத்துடன் சந்திக்க விரும்புகிறேன், ”என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார். மற்றொருவர் “மிகவும் நம்பமுடியாத அழகு. நீங்கள் எனது ஜூன் மாதத்தை உருவாக்கினீர்கள். எனது 91 வயதான தந்தை தனது ஒரே பேத்தியின் பட்டப்படிப்பில் கலந்து கொள்வதற்காக ஒட்டாவாவில் இருந்து டொராண்டோவிற்கு பயணம் செய்தார்; சுவாரசியமாக இருந்தது என்று நினைத்தேன்! அத்தகைய குடும்ப அன்பைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஒருவர் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. என்னையும் அழ வைத்தது… என்று கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா