தமிழ்நாட்டில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 1,639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 32 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற் றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 517 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 80 ஆயிரத்து 686 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரண மாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 170 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை யில், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 203 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத் துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 224 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. செங்கல்பட்டில் 120 பேருக்கும் ஈரோட்டில் 151 பேருக்கும் தஞ்சா வூரில் 117 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.